பெங்களூருவில் சகோதரரின் மகளுடன் பல ஆண்டுகளாக உல்லாம்: கர்ப்பத்தை கலைத்த ஓட்டல் உரிமையாளர்

பெங்களூரு அசோக் நகர்ல் வசித்து வருபவர் மாலா (வயது 21, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருடைய பெற்றோர் கடந்த 2006–ம் ஆண்டு இறந்து விட்டனர். இதனால், மாலா தனது தந்தையின் சகோதரரும் ஓட்டல் நடத்தி வரும்  ராஜூ என்பவரின் கண்காணிப்பில் வளர்ந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மாலாவை ராஜூ மிரட்டி உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் இதுபற்றி வெளியில் யாரிடமும் கூறவில்லை. இதனை ராஜூ தனக்கு சாதாகமாக பயன்படுத்திக் கொண்டார். இதற்கிடையே கர்ப்பம் அடைந்த மாலாவிற்கு கருகலைப்பும் செய்துள்ளார்.

கைது
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலாவிற்கு ராஜூ செக்ஸ் டார்ச்சர்  கொடுக்க ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. தனது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று மனம் உடைந்த மாலா, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தோழியிடம் கூறி கதறி அழுதார். இதுகுறித்து, அவருடைய தோழி, மாலா படித்து வரும் கல்லூரி முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து மாலாவின் சார்பில் கல்லூரி நிர்வாகம் அசோக் நகர் போலீசில் ராஜூ மீது புகார் அளித்தது. அதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜூவை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாலா அரசு பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். ஓட்டல் உரிமையாளர் ஒருவர் தனது சகோதரரின் மகளை பல ஆண்டுகளாக உல்லாசம் அனுபவித்து  கர்ப்பத்தை கலைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக