தினமும் உல்லாசம் அனுபவிக்க வற்புறுத்தி செக்ஸ் டார்ச்சர் செய்த காதலி: அடித்துக் கொன்ற தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்

ஸ்ரீமுஷ்ணம், புதன், பெப்ரவரி 24,2016

காதலியை அடித்துக் கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

காதல்
கேரளாவில் கூலி வேலை செய்து வரும் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள சாத்துக்கூடல் கீழ்பாதியை சேர்ந்த வேல்முருகனின்  மனைவி மங்கையர்க்கரசி(35).  மங்கையர்கரசிக்கும், தேவங்குடி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கோவிந்தசாமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திக்கும் அளவிற்கு போகரம்பித்தது.

இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டுக்கும் தெரிந்ததும் கண்டித்தனர். இருப்பினும் மங்கையர்க்கரசி, கோவிந்தசாமியுடன் வைத்திருந்த கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. ஆனால் கோவிந்தசாமியோ கொஞ்சம், கொஞ்சமாக தொடர்பை துண்டித்து வந்தார்.

உல்லாசம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு போலீசாரிடம் சிக்கிய கோவிந்தசாமி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தலைகுளத்தில் உள்ள ஒரு கோவிலில் சாமியாடும் ஒருவரிடம் குறி கேட்பதற்காக நான் சென்றேன். அங்கு மங்கையர்கரசியும் வந்திருந்தார். அப்போதுதான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் எங்களது செல்போன் நம்பரை பரிமாறிக்கொண்டோம். அதன்பிறகு இருவரும் செல்போனில் பேசி வந்தோம். இந்த பழக்கம் காதலாக மாறியது இருவரும் அடிக்கடி சந்தித்தோம். ஆனால் இருவருக்கும் தனிமை தேவைபட்டது. இதற்காக  தேவங்குடியில் உள்ள எனது தாய் வீட்டிற்கு சென்றேன். அங்கே சந்தித்து உல்லாசம் அனுபவித்தோம். பின் அடிக்கடி அங்கே சென்று உல்லாம அனுபவிக்க ஆரம்பித்தோம்.

செக்ஸ் டார்ச்சர்
நாட்கள் செல்ல, செல்ல மங்கையர்கரசி செக்ஸ் டார்ச்சர் செய்ய ஆரம்பித்தார். தினமும் உல்லாசம் அனுபவிக்க வற்புறுத்தி வந்தார். இதற்கு உட்பட்டு அவருடன் பல நாட்கள் உல்லாசமா இருந்தேன். எங்களது காதல் உல்லாச விவகாரம் தெரிந்ததும் எனது மனைவி கண்டித்தார். எனவே நான், மங்கையர்கரசியுடன் வைத்திருந்த தொ டர்பை கைவிட முடிவு செய்து வேலை செய்வதற்காக வெளிநாடு சென்றேன். ஆனால் உல்லாசம் தொடர வேண்டினார். ஒரு நாள், உடனே ஊருக்கும் வரும்படியும், வராவிட்டால் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். எனவே வெளிநாடு சென்ற 2 மாதத்தில் ஊருக்கு வந்துவிட்டேன். பின்னர் மங்கையர்கரசி தினமும் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார்.

அடித்துக் கொன்றேன்
இதற்கிடையில் கடந்த 22–ந் தேதி நான் எனது மனைவி, குழந்தையுடன் விருத்தாசலத்தில் நடந்த மாசிமக விழாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்ததேன். அப்போது திடீரென மங்கையர்கரசி எனது செல்போனில் தொடர்பு கொண்டு, உடனே தேவங்குடியில் உள்ள வீட்டுக்கு வருமாறு அழைத்தார். உடனே நான் வரமுடியாது என்றேன். அதற்கு மங்கையர்கரசி, வராவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டினார்.

வேறுவழியின்றி நான் தேவங்குடிக்கு சென்றேன். அங்கு பஸ் நிறுத்தத்தில் மங்கையர்கரசி நின்று கொண்டிருந்தார். அப்போது நான், உன்னால் எனது குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுகிறது என்றேன். இதனால் எனக்கும், மங்கையர்கரசிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து மங்கையர்கரசியை அடித்தேன். இதில் அவர் இறந்தார். உடனே அவரது உடலை தூக்கிச்சென்று சாலையோரத்தில் போட்டுவிட்டு ஓடிவிட்டேன். பின்னர் வெளியூர் செல்வதற்காக விருத்தாசலம் பஸ் நிறுத்தத்தில் நின்றபோது என்னை போலிசார் கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு கோவிந்தசாமி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக